பெரிய மருதுவின் மரண வாக்குமூலம்
என்னுடைய வாரிசுகளைக் கம்பெனியார்களாவது எனக்குவிரோதிகளாவது, யாதோர் இம்சையும் செய்யாமல் இருக்கும்படிக்கேட்டுக் கொள்ளுகிறேன். முருகன் துiணாயகவும் ஆகாசவாணிபூமாதேவி சாட்சியாகவும் நான் என் கழுத்தில் கயிறு போட்டுக்கொள்கிறேன். மேலே சொன்னபடி நீங்கள் கத்தியைப் போட்டுச்சத்தியம் செய்து கொடுத்ததை நான் நேரில் பார்த்துக்கொண்டேன்.இப்படிக்கு ஒப்பம் பெரிய மருது சேர்வை
ஜெகவீரபாண்டியனார். பாஞ்சாலங்குறிச்சி
வீர சரித்திரம், பகுதி 2 பப 328-331இம்மரணசாசனம் முழுமையாகஇடம் பெற்ற பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம், பேராசிரியர் ந.சஞ்சீவி எழுதிய மருதிருவர் ஆகிய நூல்களில் முழுமையாகஉள்ளன. இருப்பினும் பல வரலாற்று ஆசிரியர்கள்இம்மரணசாசனத்தை பாரா பாராவாகப் பகுபபாய்வு செய்ததில்பெரிய பாண்டியரின் வீரம், தியாகம், சகோதர வாஞ்சைஇவற்றிற்குச் சாவு மணியடிக்கின்ற சாசனமேயன்றிஉண்மையைத் தாங்கிய ஆவணமல்ல, இச்சாசனம் பலஇடங்களில் தனக்குத் தானே முரண்படுகிறதாம். எனவே நாமும்மரண சாசனத்தை விளக்கமாகச் சொல்லாமல் அண்ணன் மீ.மனோகரனின் மருதுபாண்டிய மன்னர்கள் என்ற புத்தகத்தின்வாக்கினை நாமும் எடுத்துக் கொள்வோம். (பக்கம் 654-655)முடிவுரை
சிவகங்கைச் சீமையின் வரலாற்றில் மருதுபாண்டியர்களின் பங்குதனிச்சிறப்புக்கும், பெருமைக்கும் உரியதாகும். அச்சிறியபாளையத்தை வரலாற்றுச் சிறப்புக்குரிய இடமாக நிலைநிறுத்தியபெருமை மருதுபாண்டியர்களையே சாரும். அவர்கள்முத்துவடுகநாதரிடம் எளிய பாணியில் பிரதானி தாண்டவராயன்பிள்ளையின் மூலம் சேர்ந்தது முதல் ஆங்கிலேயரால்தூக்கிலிடப்படுவது வரை போராட்டத்துக்கிடையிலேயேஅவர்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். போராட்டம்வாழ்க்கையின் ஒரு பகுதி நம்மைப் போன்றவருக்கு, ஆனால்அவர்களுக்கு போராட்டமே அவர்களின் வாழ்க்கையாயிற்று.அவர்களின் போர் உயர்ந்த நோக்குடன் வளர்ந்தது. அதன் மூலம்உயர்வு பெற முடிந்தது.மருதுபாண்டியர்களின் வாழ்க்கையின்பெரும்பகுதி நாட்டிற்குத் தொண்டு செய்வதிலேயே கழிந்தது.சிவகங்கையை மீட்ட தொடக்க ஆண்டில் மக்களின் அமைதியானவாழ்வு கருதி ஆங்கிலேயர்க்கும் ஆற்காட்டருக்கும்பெருந்தொகையை வரியாகக் கொடுத்தனர். அதற்காக அவர்கள்பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. நாட்டில் அமைதி நிலவியகாலங்களில் ஆக்கப் பணிகளில் தங்கள் கருத்தைச் செலுத்தினர்.சிவகங்கைச் சீமையை பல வழிகளிலும் வளமாக்கினர். மத வேறுபாடின்றி இறைப் பணியாற்றினர். இன வேறுபாடின்றிஅறக்கொடைகள் நல்கினர். உழவுத் தொழிலைப் பெருக்கும்பொருட்டு குளங்கள், கண்மாய்கள் வெட்டினர். குடிநீர் தேவையைஉணர்ந்து ஊருணிகளை ஏற்படுத்தியும், பாண்டியன் கிணறு எனஊருக்கு ஊரு வெட்டி தண்ணீர் தேவையை சிவகங்கைச் சீமைக்குஆற்றிய சிறந்த தொண்டுகளாகும்.மருது சகோதரர்கள் ஆங்கிலமேலாண்மையை எதிர்த்துப் போரிட்ட காலங்களில் பரங்கியருக்குநிகரான எதிரிகளாகத் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுபோரிட்டனர். திட்டமிட்டுச் செயலாற்றும் திறத்திலும்,எதிரிகளைப் பிரித்தாளும் சூழ்ச்சியிலும், புதுவகைப் போர்க்கருவிகளின் பெருக்கத்திலும் சிறந்து விளங்கி ஆங்கிலேயரை 56நாள்களுக்கு மேல் காளையார்கோயில் போரில் ஈடு கொடுத்துஎதிர்த்திருக்கின்றனர். இது அவர்களின் விடுதலை உணர்வுக்குகிடைத்த பெருமையாகும்.ஆங்கிலேய மேலாண்மையை எதிர்ப்பதற்கென அமைத்தபல்வேறு கூட்டிணைவுகளின் ஒருங்கிணைப்பாளர்கள் என்றமுறையில் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரைவிடவும்திட்டமிட்டுச் செயலாற்றும் திறன் படைத்தவர்களாக விளங்கினர்.இருப்பினும் பாழ் செய்யும் உட்பகை மருது சகோதரர்களின்நல்லுணர்வை வலுவிழக்கச் செய்தது. ஆங்கிலக்கூலிப்படையிடம் சிவகங்கை விடுதலைப்படைதோல்வியடைந்தது என்பது வரலாற்று உண்மை. இருப்பினும் வரிகொடாமை, இணக்கமின்மை, ஒத்துழையாமை ஆகிய வழிகளில்ஆங்கில மேலாண்மையை எதிர்க்காமல் அந்நியரிடமிருந்துமுற்றிலும் விடுதலை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்போரிட்ட மருது சகோதரர்களின் உள்ளுணர்வுதோல்வியடையவில்லை. அவர்களின் போர் முழக்கம் திருச்சி,ஸ்ரீரங்கம், அறிக்கையும் சிவகங்கைப் பாளையத்துக்கு மட்டுமின்றி,தென்னிந்தியாவில் ஆங்கில மேலாண்மை இருந்தஇடங்களுக்கெல்லாம் விடுத்த அறை கூவலாகும்
என்னுடைய வாரிசுகளைக் கம்பெனியார்களாவது எனக்குவிரோதிகளாவது, யாதோர் இம்சையும் செய்யாமல் இருக்கும்படிக்கேட்டுக் கொள்ளுகிறேன். முருகன் துiணாயகவும் ஆகாசவாணிபூமாதேவி சாட்சியாகவும் நான் என் கழுத்தில் கயிறு போட்டுக்கொள்கிறேன். மேலே சொன்னபடி நீங்கள் கத்தியைப் போட்டுச்சத்தியம் செய்து கொடுத்ததை நான் நேரில் பார்த்துக்கொண்டேன்.இப்படிக்கு ஒப்பம் பெரிய மருது சேர்வை
ஜெகவீரபாண்டியனார். பாஞ்சாலங்குறிச்சி
வீர சரித்திரம், பகுதி 2 பப 328-331இம்மரணசாசனம் முழுமையாகஇடம் பெற்ற பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம், பேராசிரியர் ந.சஞ்சீவி எழுதிய மருதிருவர் ஆகிய நூல்களில் முழுமையாகஉள்ளன. இருப்பினும் பல வரலாற்று ஆசிரியர்கள்இம்மரணசாசனத்தை பாரா பாராவாகப் பகுபபாய்வு செய்ததில்பெரிய பாண்டியரின் வீரம், தியாகம், சகோதர வாஞ்சைஇவற்றிற்குச் சாவு மணியடிக்கின்ற சாசனமேயன்றிஉண்மையைத் தாங்கிய ஆவணமல்ல, இச்சாசனம் பலஇடங்களில் தனக்குத் தானே முரண்படுகிறதாம். எனவே நாமும்மரண சாசனத்தை விளக்கமாகச் சொல்லாமல் அண்ணன் மீ.மனோகரனின் மருதுபாண்டிய மன்னர்கள் என்ற புத்தகத்தின்வாக்கினை நாமும் எடுத்துக் கொள்வோம். (பக்கம் 654-655)முடிவுரை
சிவகங்கைச் சீமையின் வரலாற்றில் மருதுபாண்டியர்களின் பங்குதனிச்சிறப்புக்கும், பெருமைக்கும் உரியதாகும். அச்சிறியபாளையத்தை வரலாற்றுச் சிறப்புக்குரிய இடமாக நிலைநிறுத்தியபெருமை மருதுபாண்டியர்களையே சாரும். அவர்கள்முத்துவடுகநாதரிடம் எளிய பாணியில் பிரதானி தாண்டவராயன்பிள்ளையின் மூலம் சேர்ந்தது முதல் ஆங்கிலேயரால்தூக்கிலிடப்படுவது வரை போராட்டத்துக்கிடையிலேயேஅவர்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். போராட்டம்வாழ்க்கையின் ஒரு பகுதி நம்மைப் போன்றவருக்கு, ஆனால்அவர்களுக்கு போராட்டமே அவர்களின் வாழ்க்கையாயிற்று.அவர்களின் போர் உயர்ந்த நோக்குடன் வளர்ந்தது. அதன் மூலம்உயர்வு பெற முடிந்தது.மருதுபாண்டியர்களின் வாழ்க்கையின்பெரும்பகுதி நாட்டிற்குத் தொண்டு செய்வதிலேயே கழிந்தது.சிவகங்கையை மீட்ட தொடக்க ஆண்டில் மக்களின் அமைதியானவாழ்வு கருதி ஆங்கிலேயர்க்கும் ஆற்காட்டருக்கும்பெருந்தொகையை வரியாகக் கொடுத்தனர். அதற்காக அவர்கள்பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. நாட்டில் அமைதி நிலவியகாலங்களில் ஆக்கப் பணிகளில் தங்கள் கருத்தைச் செலுத்தினர்.சிவகங்கைச் சீமையை பல வழிகளிலும் வளமாக்கினர். மத வேறுபாடின்றி இறைப் பணியாற்றினர். இன வேறுபாடின்றிஅறக்கொடைகள் நல்கினர். உழவுத் தொழிலைப் பெருக்கும்பொருட்டு குளங்கள், கண்மாய்கள் வெட்டினர். குடிநீர் தேவையைஉணர்ந்து ஊருணிகளை ஏற்படுத்தியும், பாண்டியன் கிணறு எனஊருக்கு ஊரு வெட்டி தண்ணீர் தேவையை சிவகங்கைச் சீமைக்குஆற்றிய சிறந்த தொண்டுகளாகும்.மருது சகோதரர்கள் ஆங்கிலமேலாண்மையை எதிர்த்துப் போரிட்ட காலங்களில் பரங்கியருக்குநிகரான எதிரிகளாகத் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுபோரிட்டனர். திட்டமிட்டுச் செயலாற்றும் திறத்திலும்,எதிரிகளைப் பிரித்தாளும் சூழ்ச்சியிலும், புதுவகைப் போர்க்கருவிகளின் பெருக்கத்திலும் சிறந்து விளங்கி ஆங்கிலேயரை 56நாள்களுக்கு மேல் காளையார்கோயில் போரில் ஈடு கொடுத்துஎதிர்த்திருக்கின்றனர். இது அவர்களின் விடுதலை உணர்வுக்குகிடைத்த பெருமையாகும்.ஆங்கிலேய மேலாண்மையை எதிர்ப்பதற்கென அமைத்தபல்வேறு கூட்டிணைவுகளின் ஒருங்கிணைப்பாளர்கள் என்றமுறையில் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரைவிடவும்திட்டமிட்டுச் செயலாற்றும் திறன் படைத்தவர்களாக விளங்கினர்.இருப்பினும் பாழ் செய்யும் உட்பகை மருது சகோதரர்களின்நல்லுணர்வை வலுவிழக்கச் செய்தது. ஆங்கிலக்கூலிப்படையிடம் சிவகங்கை விடுதலைப்படைதோல்வியடைந்தது என்பது வரலாற்று உண்மை. இருப்பினும் வரிகொடாமை, இணக்கமின்மை, ஒத்துழையாமை ஆகிய வழிகளில்ஆங்கில மேலாண்மையை எதிர்க்காமல் அந்நியரிடமிருந்துமுற்றிலும் விடுதலை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்போரிட்ட மருது சகோதரர்களின் உள்ளுணர்வுதோல்வியடையவில்லை. அவர்களின் போர் முழக்கம் திருச்சி,ஸ்ரீரங்கம், அறிக்கையும் சிவகங்கைப் பாளையத்துக்கு மட்டுமின்றி,தென்னிந்தியாவில் ஆங்கில மேலாண்மை இருந்தஇடங்களுக்கெல்லாம் விடுத்த அறை கூவலாகும்
No comments:
Post a Comment